ஹார்டிக் பாண்டியாவை விட ரெய்னா இந்த விஷயத்தில் பெஸ்ட். பலவருட சீக்ரெட்டை உடைத்த சாஹல் – விவரம் இதோ

Raina-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக அவரது வீட்டில் இருந்து இணையத்தில் ரசிகர்களுக்கு பதில் அளித்து வருகிறார். இதேபோன்று உலகெங்கும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இந்த ஓய்வு நேரத்தை ரசிகர்களுக்காக செலவழித்து வருகின்றனர்.

Chahal

அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஓய்வில்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்த இந்திய வீரர்களுக்கு கரோனா வைரஸ் மூலமாக ஒரு ஓய்வு கிடைத்துள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களுக்கு கண்டிப்பாக இவர்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

- Advertisement -

கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நிலையில் வீட்டிற்குள்ளேயே ஊரடங்கு காரணமாக முடங்கி போயுள்ளனர். மேலும், சமூக வளைதளத்தில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். சமூகவலைதளத்தில் இவர்கள் ரசிகர்களுடன் உரையாடும்போது தங்களுக்கு தெரிந்த மற்ற இந்திய வீரர்களின் ரகசியங்கள் மற்றும் ஆடுகளத்தில் நடக்கும் தெரியாத விஷயங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

Chahal

அப்படி இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் யார் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பாடகர் யார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் வீரர்களின் சுரேஷ் ரெய்னா மிக அருமையாக பாடுவார். அவரை தொடர்ந்து மோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா அவருக்கு சிறந்த குரல் வளம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் ரெய்னா மிக அருமையாக பாடும் திறன் படைத்தவர். ஓய்வறையில் வீரர்களிடையே ரெய்னா மிக அருமையாக பாடுவார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் இளம் வீரரான ஹார்டிக் பாண்டியா எப்போதும் துறுதுறுப்பாக இருக்கக்கூடியவர் அதனால் அவர் இவ்வாறு பாடுவது ஆடுவது என்பது பெரிய விடயம் கிடையாது.

rainayoyo

ஆனால் எப்போதும் களத்திலும் சரி, வெளியிலும் சரி பெரிய அளவில் குறும்பில் ஈடுபடாத ரெய்னாவா இவ்வாறு பாட்டுபாடும் பழக்கத்தினை வைத்துள்ளார் என்று ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement