இவருடன் நான் திருமணம் செய்து கொண்ட பிறகு, அவரது விருப்பத்தை மக்கள் மதிக்கும்படி சஹால் வேண்டுகோள் – காரணம் இதுதான் ?

- Advertisement -

தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை  திருமணம் செய்து கொள்ள போவதாக வந்த தகவல் குறித்து இந்திய சூழல் பந்து வீச்சாளர் யூஸ்வேந்த்ர சஹால் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது கருத்துக்களையும் , வேண்டுகோளையும் தெரிவித்துள்ளார்.

kapoor

- Advertisement -

ஐ பி எல் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தவர் சஹால்.தற்போது ஐ பி எல் போட்டிகளில் பெங்களூரு அணியில் ஆடிவரும் சஹால் விரைவில் தான் காதலித்து வரும் தனிஷா கபூர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று தகவல்களை வெளியாகிவந்தன .

இந்நிலையில் இந்த தகவலை மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சஹால் ” அனைவருக்கும் வணக்கம் , இந்த பதிவின் மூலம் நான் அனைவருக்கும் தெரிவிக்கும் விஷயம் என்னவென்றால் , நான் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எந்த ஒரு எண்ணமும் இப்போதைக்கு இல்லை , மேலும் நான் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறி வரும் தனிஷா கபூர் எனது சிறந்த நண்பர் ” என்று பதிவிட்டுள்ளார் .

இதுபற்றி மேலும் பதிவிட்டுள்ள சஹால் “இது போன்ற வதந்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் என்று நான் ஊடகத்திடமும் , எனது ரசிகர்களிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன் , எனது உணர்வுகளுக்கும் , எனது தனிப்பட்ட விஷயத்திற்கும் நீங்கள் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் .அதானல் எனது திருமணத்தை பற்றி பேசுவதை தயவு செய்து நிறுத்தங்கள் .ஒரு விஷத்தை பதிவிடும் பொது அது உண்மையா என்று ஆராயுங்கள் “என்று பதிவிட்டுள்ளார்

Advertisement