மனைவியுடன் விவாகரத்து, காரணம் ஷ்ரேயஸ் ஐயர் – ரசிகர்கள் கிளப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்சத்திர வீரர், நடந்தது என்ன

Shreyas Iyer IND
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் சமீபகால இந்திய கிரிக்கெட்டில் வெள்ளை பந்து அணியில் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு சவால் கொடுக்கும் வகையில் அனில் கும்ப்ளேவுக்கு பின் நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் லெக் ஸ்பின்னராக அசத்தும் இவர் கடந்த 2016க்குப்பின் முதன்மை பவுலராக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது கேரியரை தொடக்கி பெங்களூருவில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டதால் இந்தியாவுக்காக 2016இல் விளையாட அறிமுகமான இவர் கடந்த வருடம் பார்மை இழந்ததால் டி20 உலக கோப்பையில் தனது இடத்தை இழந்தார்.

அதனால் பெங்களூரு அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுகாக அபாரமாக செயல்பட்டு ஹாட்ரிக் விக்கெட் உட்பட ஊதா தொப்பியை வென்று பார்முக்கு திரும்பினார். அதனால் மீண்டும் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளார். பொதுவாகவே களத்தில் ஜாலியாக காணப்படும் இவர் கடந்த 2020இல் தனஸ்ரீ எனும் பெண்ணை காதலித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது கணவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜாலியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாகும்.

- Advertisement -

ஸ்ரேய்ஸ் ஐயர்:
அந்த நிலைமையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் சஹால் மனைவி மற்றும் மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில் சூரியகுமார் யாதவ் தனது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் பக்கத்தில் அவரைத் தொடவில்லை என்றாலும் அவரை கிட்டத்தட்ட உரசியவாறு சிரித்த முகத்துடன் சஹால் மனைவி நிற்கிறார். இதில் வில்லங்கம் என்னவெனில் அந்த படத்திற்கு தலைப்பாக “மன்னித்துவிடுங்கள் சஹால், நாங்கள் உங்களை மிஸ் செய்யவில்லை” என்று இரட்டை அர்த்தத்தில் சூர்யகுமார் யாதவ் பதிவிட்டிருந்தார்.

அதுதான் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய புயலை கிளப்ப வைத்தது. ஏனெனில் முதலில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் தனஸ்ரீக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக வழக்கம் போல தேவையற்ற வதந்திகளைப் பரப்ப தொடங்கினர். ஆனால் அடுத்த நாளே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தனஸ்ரீ சஹால்” என்ற பெயரிலிருந்து “சஹால்” என்ற பெயரை தனஸ்ரீ நீக்கினார். அதை உன்னிப்பாக கவனித்த ரசிகர்கள் ஸ்ரேயாஸ் அய்யர் விஷயம் கசிந்து விட்டதாகவும் அதனால் சஹால் அவரை சந்தேகிப்பதாலேயே அவருடைய பெயரை தனது பெயரிலிருந்து நீக்கியவதாகவும் வதந்தியை ஆதாரத்துடன் கிளப்பினார்கள்.

- Advertisement -

உருட்டிய ரசிகர்கள்:
குறிப்பாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அவருடைய நண்பர் மற்றும் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் செய்த துரோகத்தை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் சஹால் 2வது தினேஷ் கார்த்திக்காக மாறப் போவதாகவும் பேசினார்கள். அந்த நிலைமையில் “எனது வாழ்வின் புதிய அத்தியாயம் துவங்கப் போகிறது” என்று ஒரு மறைமுகமான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஹால் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவு சமூக வலைதளங்களில் மேலும் காட்டு தீயை பரப்பியது என்று கூறலாம். ஏனெனில் ஸ்ரேயாஸ் அய்யர் – தனஸ்ரீ ஆகியோரின் தொடர்பை அறிந்து தினேஷ் கார்த்திக் போல விரைவில் சஹாலும் விவாகரத்து செய்யப்போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடந்த 12 மணி நேரங்களாக தொடர்ச்சியாக பதிவிட்டு டிரென்ட் செய்தார்கள்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி:
அதன் காரணமாக இந்த நிகழ்வு இன்று இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அதனால் அதிர்ச்சியடைந்த சஹால் இவை அனைத்துமே வெறும் வதந்தி தான் என்றும் ரசிகர்கள் கூறுவது போல் எதுவுமே நடக்கவில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக பதிவிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

“எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பும் ஒளியும்” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் ஒரு ஜாலியான இன்ஸ்டாகிராம் பதிவு இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் இனிமேலாவது விளையாட்டுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை கிரிக்கெட் வீரர்கள் உணரவேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement