- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனிக்கு இணையாக பண்ட் புகழ்பெற இதனை செய்ய வேண்டும் – யுவராஜ் ஓபன்டாக்

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு தொடர்ந்து இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்திய அணியில் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்டம் ஆட்டம் சிறப்பாக இல்லை.

மேலும் அவரது இந்த பொறுப்பற்ற ஆட்டத்தினால் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பண்ட் குறித்து தனது கருத்தினை தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி போன்ற மிகப் பெரிய வீரராக பண்ட் செயல்பட இன்னும் சில காலம் தேவைப்படும்.

- Advertisement -

தோனியுடன் அவரை ஒப்பிட்டு பேசுவது தவறான விடயமாகும். ஏனெனில் தோனி நீண்டகாலமாக பயணித்து இந்த இடத்தை அடைந்து உள்ளார். எனவே உடனடியாக தோனியின் அளவிற்கு பண்ட்டை பெரியதாக பார்த்தால் அது நடக்காத விடயம் ஆகும். மேலும் பண்ட் மீது தற்போது இருக்கும் அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாட செய்ய வேண்டும். அப்போதுதான் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் .இதற்கு கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் அவருக்கு உதவ வேண்டும்.

தோனியை போன்று பண்ட் மாற வேண்டுமென்றால் அதற்கு சில காலமும் அவருக்கான அவகாசம் தேவை அவரிடமிருந்து ஒருமுறை சிறப்பான ஆட்டம் வெளிப்படுமாயின் அவர் அதிலிருந்து படிப்படியாக கற்றுக் கொண்டு தனது திறமையை நிரூபித்தார். மேலும் அவர் நிச்சயம் திறமையான வீரர் தான் அவரால் இந்திய அணிக்கு வெற்றிகரமான கீப்பராக மாறவும் முடியும் என்று யுவராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by