84 ரன்ஸ் அடிச்சு பிரிஞ்சுருந்த அப்பா, அம்மாவை சேத்து வெச்சேன்.. அப்பா என் பேட்டிங்கை பாத்தா பிடிக்காது.. யுவி பேட்டி

Yuvraj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஆல் ரவுண்டராகவும் அறியப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்டு ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்த அவர் தோனி தலைமையில் கோப்பையை வெல்ல உதவினார். அதே போல 2011 உலகக் கோப்பையில் புற்றுநோயைப் பற்றி கவலைப்படாத அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார்.

அந்த வகையில் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனான யுவ்ராஜ் சிங் பல இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அப்படிப்பட்ட அவருடைய தந்தை மற்றும் முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் அதிரடியாக விமர்சிக்கக்கூடியவராக அறியப்படுகிறார். இந்தியாவுக்காக பெரியளவில் சாதிக்காத அவர் தோனியை பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

திட்டக்கூடிய அப்பா:

இந்நிலையில் தம்முடைய தந்தை தனது ஆட்டத்தை பார்ப்பதை விரும்ப மாட்டேன் என்று யுவ்ராஜ் கூறியுள்ளார். மேலும் தனது அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் அடித்தது பிரிந்திருந்த தமது பெற்றோர்களை சேர்த்து வைக்க உதவியதாகவும் யுவ்ராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது தந்தை பல நேரங்களில் கடினமாக நடந்து கொள்வார்”

“அதே சமயம் அவருடைய கனவு வாழ்க்கையை நான் நிஜத்தில் வாழ வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஆம் அவரை எனக்குப் பிடிக்காத தருணங்கள் நிறைய இருந்தன. அவர் என்னை நிறைய தள்ளினார். அதுவே இந்தியாவுக்காக 18 வயதிலேயே நான் விளையாடுவதற்கான காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக என்னுடைய தந்தை எனது ஆட்டத்தை நேரில் வந்து பார்ப்பதை நான் விரும்ப மாட்டேன்”

- Advertisement -

இணைந்த பெற்றோர்கள்:

“ஏனெனில் நான் அவுட்டானால் அவர் என் மீது கோபப்படுவார். குழந்தையாக இருக்கும் போது அவர் என்னை பந்தை காற்றில் அடிக்க அனுமதிக்க மாட்டார். என் மீது அதிகமாக கோபப்பட்டு திட்டுவார். அதனால் நான் விளையாடும் போட்டிக்கு வராதீர்கள் என்று அவரிடம் கூறுவேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் அடித்த தொடர் முடிந்த பின் பிரிந்திருந்த என்னுடைய பெற்றோர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள்”

இதையும் படிங்க: பாக்க ஈஸியா இருந்தாலும் ரோஹித் செய்றது கஷ்டமான வேலை.. ரிட்டையராக சொன்ன சேவாக் திடீர் பாராட்டு

“அது என்னுடைய வாழ்வின் மறக்க முடியாத அற்புதமான தருணங்களில் ஒன்றாகும். என்னுடைய செயல்பாடு அவர்களை ஒன்றாக இணைய வைத்தது. என்னைப் பார்த்த அவர்கள் உணர்ச்சியுடன் கட்டிப்பிடித்து வரவேற்றார்கள். செய்திதாளில் வந்த அந்த புகைப்படம் இன்னும் என்னிடம் இருக்கிறது. ஒரு குழந்தையாக உங்களுடைய பெற்றோர்களை ஒன்றாகப் பார்ப்பது அற்புதமானது” என்று கூறினார்.

Advertisement