இந்தியா இல்லை..! அடுத்த உலககோப்பையை வெல்லும் அணி இதுதான்..! முகமது யூசுப்

yusuf pak
- Advertisement -

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு 50ஓவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை நடைபெறவுள்ளது இதனையடுத்து அனைத்து அணிகளும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள்வீரர் யூசுப் அடுத்த ஆண்டு நடைபெறும் உலககோப்பையை பாகிஸ்தான் அணியே கைப்பற்றும் என பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

yusuf

- Advertisement -

மேலும் அவர் ஏன் பாகிஸ்தான் அணிதான் வெல்லும் என்பதிற்கு காரணத்தையும் கூறியுள்ளார்”பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் சரியான அளவில் உள்ளார்கள் என்றும் அவர்களது அணியில் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இப்போதுள்ள பாகிஸ்தான் அணி சரியான கலவையில் உள்ளது அணிக்கு ஆரோக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெற்றி வாய்ப்பினை குறித்து பேசிய யூசுப் இந்தியஅணியில் சிறந்த தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர் ஆனால் அவர்களது பௌலிங் யூனிட் சரி இல்லை என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 9000க்கும் மேற்பட்ட ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளார்.

yousuf 2

யூசுப் பாகிஸ்தான் அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற இவர் சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.ஓய்வு பெற்ற பின் இளம்வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.இவர் விளையாடும் காலகட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக கருதப்பட்டார்.இக்கருத்தினை கூறிய நிலையில் இந்தியஅணி இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் தொடரில் பங்கேற்று தற்போது விளையாடி வருகிறது.

Advertisement