இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோற்க தோனியின் இந்த கெட்ட எண்ணமே காரணம் – யுவராஜ் தந்தை பேட்டி

Yograj
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் இடம் பிடித்தாலும் அவர் பேட்ஸ்மேனாகவே களமிறங்குவார். ரிஷப் பண்ட் கீப்பராக செயல்படுவார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் உலக கோப்பை இந்திய அணியின் தோல்வி குறித்து தோனியை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை தோனியால் அடித்திருக்க முடியும். ஆனால் தோனி வேண்டும் என்று இந்திய அணியை தோற்கடித்து செய்துவிட்டார்.

Dhoni

ஏனெனில் அவரைத் தவிர வேறு யாரும் உலகக்கோப்பையை கேப்டனாக பெறக்கூடாது என்ற கெட்ட எண்ணம் தோனியிடம் உள்ளது. எனவே தோனியே திட்டமிட்டு இந்திய அணியை தோற்கடித்து விட்டார் என்று குற்றம் சாட்டினார். இவர் தோனி குறித்து இப்படி பேசுவது இது முதல் முறை இல்லை பலமுறை தோனியை இகழ்ந்து யோக்ராஜ் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement