சச்சின் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் கொடுத்த இந்த அறிவுரை தான் எனது வெற்றிக்கு காரணம் – யாஷஷ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

Jaishwal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஆலோசனையை தான் எனது பேட்டிங் பயிற்சியில் கடைபிடித்தேன். அது மிகவும் கை கொடுக்கிறது என்றும் இந்திய அணியின் ஜூனியர் கிரிக்கெட் வீரரான அண்டர் 19 நட்சத்திரம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

jaiswal

- Advertisement -

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா சென்றுள்ளது. பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த தொடரில் தான் சிறப்பாக விளையாடுவதற்கு வாசிம் ஜாபர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரே காரணம் என்று இளம் வீரர் ஜெய்ஷ்வால் கூறினார்.

இன்றைய போட்டிக்கு முன்பாக அளித்த பேட்டியில் : பல்வேறு விஷயத்தை பகிர்ந்து கொண்ட அதில் அவர் கூறியதாவது : நான் போட்டிகளில் விளையாடும் போது வாசிம் ஜாபர் மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நான் வழிபடுவேன். வாசிம் ஜாபர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் பெற்றவர். அங்குள்ள பிட்ச்கள் பற்றி அவருக்கு நன்றாக தெரியும்.

jaiswal 1

பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஆலோசனையில் ஒவ்வொரு பந்துக்கும் அடுத்த பந்து வீசுவதற்கு முன்பாக என்னை யூகங்களை வகுப்பார்கள் என்று சில யோசனைகளை கொடுத்தார். அதனை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த ஆலோசனை எனக்கு நன்றாக பயன்பட்டது என்றும் ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement