ஒருவேளை உணவுக்கு கஷ்டம். பானிபூரி கடையில் வேலை. அரையிறுதியில் சதம் – இளம் வீரருக்கு குவியும் வாழ்த்து

Jaiswal-3
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இதனால் அவரை இந்தியாவே கொண்டாடி வருகிறது.

jaiswal 1

- Advertisement -

மேலும் அதற்கு காரணம் அவர் அடித்த சதம் மட்டும் இல்லை வறுமையை வென்று சாதித்த அவரின் விடாமுயற்சியே என்று ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு மிகப்பெரும் வறுமையில் தங்குவதற்கு இடமின்றி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மும்பைக்கு சென்று குடிசை அமைத்து அதில் ஜெய்ஸ்வால் தங்கினார்.

பிறகு ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட அவர் பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்து தனது கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார். வறுமையின் சோகத்தையும் மறந்து கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடித்த அவரை ஜுவாலா சிங் என்ற பயிற்சியாளர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது கிரிக்கெட் செலவுகள் அனைத்தையும் ஏற்று அவருக்குப் பயிற்சியும் கொடுத்து வந்தார்.

Jaiswal-4

இவரின் அந்த விடா முயற்சியினாலும், அயராத உழைப்பினாலும் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடும் மும்பை அணியில் இடம்பிடித்து ஜார்கண்ட் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் உலககோப்பை இந்திய அணியிலும் அவர் இடம் கிடைத்தது. அது மட்டுமின்றி தன்னால் சாதிக்க முடியும் என்பதை அரையிறுதிப் போட்டியில் சதமடித்து உலகிற்கு அழுத்தமாக அவரது வருகையை தெரிவித்துள்ளார்.

jaiswal

மேலும் வரும் ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க பட்டுள்ளார். வறுமை, பசி என பல தடைகளை கடந்து இன்று அவர் சாதித்து விட்டார். இந்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல்லில் அவர் திறமையை வெளிக்காட்டும் பட்சத்தில் இந்திய அணியிலும் அவர் இடம் பிடிக்க வெகுதூரமில்லை என்பது அவரின் திறமை மூலம் தெரியவந்துள்ளது. இளம் வீரரான அவர் வறுமையை வென்று தனது திறமையை மூலம் ஒரு முன்னுதாரணமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement