4 ஆம் நாள் ஆட்டத்திலும் ஏற்பட்டுள்ள தடை. இப்படியே போன டிரா தான் ஆகும் போல – என்ன நடக்குது ?

WTC
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி கடந்த 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட முதல் நாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

IND

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சை 217 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. இந்திய அணி சார்பாக ரஹானே 49 ரன்களும், கேப்டன் கோலி 44 ரன்களும் குவித்தனர். அதன் பிறகு தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நியூசிலாந்து அணி நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 101 ரன்கள் குவித்து இருந்தது.

நியூசிலாந்து அணி சார்பாக துவக்க வீரர்கள் லதாம் 32 ரன்களும், கான்வே 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு வந்த வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டைலர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நான்காம் நாள் போட்டி துவங்க வேண்டிய இன்று மீண்டும் மைதானத்தில் மழை வந்துள்ளதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Rain

(3.30) மூன்று முப்பது மணிக்கு துவங்க வேண்டிய போட்டி தற்போது ஒரு மணி நேரம் கடந்தும் இன்னும் மழை நிற்காத காரணத்தினால் துவங்காமல் உள்ளது. இன்று 4வது நாள் போட்டி நடைபெறும் நிலையில் இன்னும் முதல் இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதனால் இந்த போட்டியின் 6-வது நாளான ரிசர்வ் டேவுக்கு சென்றாலும் இப்போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Jamieson 2

இப்படி இங்கு மழை பெய்யும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தால் போட்டியை வேறு எங்கேயாவது மாற்றி இருக்கலாமே என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தின் வாயிலாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement