Worldcup : உ.கோ இந்திய அணி இங்கிலாந்து செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Kohli
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்த உலகக்கோப்பை தொடருக்காக பயிற்சி போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி மே மாதம் 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுவதாக இருந்தது. இதற்காக ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 30 பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள் இந்திய அணி நிர்வாகம் சார்பில் போடப்பட்டது. ஆனால், ஜெட் ஏர்வேஸ் கடந்த வாரம் விமான சேவையை நிறுத்தியது. இதனால் தற்போது மீண்டும் விமான டிக்கெட் உறுதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

indiateam

மேலும், அப்படியே டிக்கெட் கிடைத்தாலும் அணி வீரர்கள் அனைவர்க்கும் ஒரே விமானத்தில் கிடைப்பது அரிது. அதுமட்டுமின்றி இருக்கைகளின் வசதிகளை தளர்த்தி பிசினஸ் கிளாஸ் இல்லாத விமானத்தில் பயணிக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

Advertisement