பல்வேறு நாடுகள் பங்குபெறும் டீ20 உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் நாட்டின் பிரிட்டன் நகரில் தொடங்கபட உள்ளது. மேலும் இந்த போட்டியில் இந்தியா எந்த அணியுடன் முதலில் மோத போகிறது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2016 இல் நடந்து முடிந்த டி20 போட்டிகளுக்கு பிறகு அடுத்த உலக கோப்பை போட்டிகள் 2020 தான் நடக்கும் என்று பல்வேறு தகவல்கள் வந்தது . ஆனால் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் டீ20 உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று முடிவெடுக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை பி சி சி ஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரபல ibn என்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் டி20 போட்டிகள் அடுத்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த டி20 போட்டியில் பங்குபெறும் இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியுடன் மோதவுள்ளது மேலும் இந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை பி சி சி ஐ இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை .