அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு இவரே வெற்றியை பெற்று கொடுத்தார் – வில்லியம்சன் மகிழ்ச்சி

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்த ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது :நான்கு நாட்கள் சரியான முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம் . இந்திய அணி எவ்வளவு பெரிய அணி என்று நமக்கு தெரியும் . முதல் இன்னிங்சில் சரியான இடத்தில் பந்து வீசினோம் அதுவே நமக்கு உதவியது

பேட்டிங்கில் ஓரளவிற்கு நன்றாக விளையாடி தேவையான ரன்களை குவித்தோம். ஆடுகளம் போட்டி முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு உதவியது. முதல் இன்னிங்சின் போது கடைசி வரிசையில் விளையாடிய ஜேமிசன் மற்றும் போல்ட் அடித்த ரன்கள் மிகவும் முக்கியமானவை. மேலும் பந்துவீச்சில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

Jamieson

கைல் ஜாமிஷன் நுணுக்கமாக பந்து வீசி வருகிறார். முதல் தர போட்டியிலும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார் . இப்பொது அவரது அறிமுக முதல் போட்டி பேட்டிங்கிலும் நன்றாக அமைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையிலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இந்த தொடர் அவருக்கு சிறப்பான அறிமுக தொடராக மாறியுள்ளது.

Southee

சவூதி அவரால் முடிந்த அளவிற்கு சிறப்பாக பந்துவீசினார். மேலும் இடது மற்றும் வலது கையை பந்துவீச்சாளர்கள் அமைந்த ஒரு கூட்டணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது. இவ்வாறு பேசினார் கேன் வில்லியம்சன்.

Advertisement