இவர் வேற லெவலில் விளையாடுறாரு. அவராலே இந்திய அணியை எளிதில் வீழ்த்தினோம் – வில்லியம்சன் மகிழ்ச்சி

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த தோல்வி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Williamson-1

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : இந்திய அணியை வீழ்த்தியது நன்றாக இருக்கிறது. 2 போட்டியிலும் ஆடுகளம் போட்டி தன்மைக்கு ஏற்றவாறு இருந்தது. நாங்கள் 30 முதல் 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதிகமாக வைத்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்திய அணி உலக தரம் வாய்ந்த அணி அந்த அணியை வீழ்த்தியது நிம்மதியாக இருக்கிறது. கைல் ஜெமிஷன் ஒரு அற்புதமான திறமை படைத்தவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் இரண்டு போட்டியிலும் தன் பங்கை அளித்தார். அவரது உயரம் காரணமாக சற்று அதிகமாக பவுன்சர் கிடைத்தது. பேட்டிங்கிலும் அவர் எடுத்த ரன்கள் மதிப்பு மிக்கவையாக இருந்தது.

Jamieson

வலிமையான இந்திய அணிக்கு எதிராக எங்களது அணியின் ஒரு சில வீரர்களுக்கு இந்த போட்டி கற்கும் நேரம் ஆக இருந்துள்ளது அடுத்த போட்டியியை நோக்கி காத்திருக்கிறோம் இவ்வாறு கூறினார் கேன் வில்லியம்சன்கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement