இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்தது. இதனை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மூன்றாவது டி20 போட்டியின் போது பீல்டிங்கில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் அதனை அடுத்து மீதமிருந்த இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் டிம் சவுதி கேப்டனாக செயல்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு டாம் லதாம் கேப்டனாக செயல்பட உள்ளார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் அவர் கேப்டனாக இருப்பார் மூன்றாவது போட்டியில் வில்லியம்சன் திரும்பும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tom Latham will now lead the side at Seddon Park and Eden Park #NZvIND https://t.co/IQUlt6jSPp
— BLACKCAPS (@BLACKCAPS) February 3, 2020
மேலும் இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் பெரிய அளவில் காயம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இருப்பினும் அவர் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் இதனை அடுத்து பயிற்சிகளை அவர் மேற்கொள்வார் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.