ஏக்கம், வேதனை, துயரம்..! ரோஹித் ஷர்மா ட்விட்டரில் புலம்பல்..!

sharma
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதே 2-1 கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
rohitsachin
அதில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்த ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வந்தார். டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். அதே போல ஒரு நாள் தொடரின் முதல் போட்டியிலும் 114 பந்துகளில் 137 ரன்களை குவித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில், தொடர் நாயகன் விருதை பெற்ற ரோஹித் ஷர்மாவிற்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ள ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ” சூரியன் நாளை மீண்டும் உதிக்கும் (sun will rise again tomorrow) ” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஷிகர் தவான் ,கே எல் ராகுல் ,முரளி விஜய் ,சடீஸ்வர் புஜாரா,அஜின்கியா ரஹானே ,கருண் நாயர் ,தினேஷ் கார்த்திக் ,ரிஷப் பண்ட் ,அஸ்வின் ,ஜடேஜா ,குல்தீப் யாதவ் ,ஹார்திக் பாண்டியா ,இஷாந்த் ஷர்மா ,மொஹமத் சமி ,உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்துள் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement