சிரித்துக் கொண்டே விராட் கோலியிடம் பாகிஸ்தானை போல் வன்மத்தை காட்டிய சாகிப் அல் ஹசன் – நடந்தது என்ன

Virat Kohli vs Shakib Al Hasan IND vs BAN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்ததால் எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதியன்று அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்தை தன்னுடைய 4வது போட்டியில் எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து 184/6 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே 2 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 67 ரன்கள் பார்த்து அதிரடி காட்டிய கேஎல் ராகுல் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (32) ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அவுட்டானார்.

அப்போது அந்த சூரியகுமார் தனது பங்கிற்கு 3 பவுண்டரியுடன் 30 (16) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா 5 (6) தினேஷ் கார்த்திக் 7 (5) அக்சர் பட்டேல் 7 (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற விராட் கோலி 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64* (44) ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13* (6) ரன்களும் குவித்து காப்பாற்றினார்கள். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 3 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

வன்மத்தை காட்டிய சாகிப்:
அதை தொடர்ந்து 185 ரன்களை துரத்திய அந்த அணிக்கு ஒருபுறம் ஷாண்டோ நங்கூரமாக நிற்க மறுபுறம் எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸ் பவர்பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வெறும் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதனால் 7 ஓவரில் 66/0 என்ற அதிரடியான தொடக்கத்தை பெற்ற போது மழை வந்தது. அப்போது டிஎல்எஸ் முறைப்படி வங்கதேசம் 17 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர்.Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

இருப்பினும் சற்று நேரத்தில் மழை ஒதுங்கியதால் 16 ஓவர்களில் 151 ரன்கள் என்ற புதிய இலக்கு வங்கதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (27) ரன்களில் மிரட்டிக் கொண்டிருந்த லிட்டன் தாஸை கேஎல் ராகுல் ரன் அவுட் செய்ததால் ஏற்பட்ட திருப்பு முனையை பயன்படுத்திய இந்தியா ஷாகிப் அல் ஹசன் 13 (12) போன்ற அடுத்து வந்த முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய அரஷ்தீப் சிங் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

முன்னதாக இப்போட்டியில் கடைசி நேரத்தில் பரபரப்பாக ரன்களை சேர்த்த விராட் கோலி ஹசன் முகமது வீசிய 15வது ஓவரின் கடைசி பவுன்சர் பந்தில் லெக் சைட் திசையில் இழுத்து அடித்து சிங்கள் எடுத்தார். அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பவுன்சர் போடப்பட்ட காரணத்தால் மீண்டும் உயரமாக வந்த அந்த பந்தை விராட் கோலி நோ-பால் கேட்டுக் கொண்டே சிங்கிள் ஓடினார். அதன் காரணமாக பக்கவாட்டில் இருந்த அம்பயர் மரைஸ் எரஸ்மஸ் இறுதியில் அதை நோ-பால் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனால் கோபமடைந்த வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் கவர் திசையில் இருந்து ஓடி வந்து விராட் கோலியிடம் சிரித்தவாரே கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் கேட்பதற்காக நோ-பால் வழங்காதீர்கள் என்ற வகையில் நடுவரை சாடினார். ஆனால் உண்மையாகவே அது நோ-பால் தான் என்று விராட் கோலி அவரிடம் விளக்கியதால் ஒரு சில நொடிகள் அவர்களுக்கிடையே சிரித்த முகத்துடன் வாக்கு வாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியில் இதே போல் கடைசி ஓவரில் விராட் கோலி நோ-பால் கேட்டார் என்பதற்காக இதே நடுவர் பணத்தை வாங்கிக்கொண்டு ஆதரவாக செயல்பட்டதாக பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர். அந்த நிலைமையில் இப்போட்டிக்கு முன்பாக இந்தியாவை தோற்கடித்து அதிர்ச்சி கொடுப்போம் என்று எச்சரித்திருந்த சாகிப் அல் ஹசன் அந்த வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு அந்த தருணத்தில் விராட் கோலி கேட்டார் என்பதற்காக நோ-பால் கொடுக்க வேண்டாம் என்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement