கபில் தேவ் ஸ்டேண்டை தாண்டி மைதானத்துக்கு வெளியே பெரிய சிக்ஸரை பறக்க விட்ட ராகுல் – மாஸ் ஃபார்முக்கு வந்துட்டாரு

KL Rahul Six
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ருதுராஜ் கைக்வாட் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ர்ன்களை சேர்த்தார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த பின் தடுமாறி வந்த அவர் இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி கில்லுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை விளாசி 105 (90) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

மெகா சிக்ஸர்:
மறுபுறம் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மண் கில் தொடர்ந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 104 (97) ரன்கள் குவித்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கேஎல் ராகுல் கேமரூன் கிரீன் வீசிய 35வது ஓவரின் 3வது பந்தை அதிரடியாக எதிர்கொண்ட முழு பவர் கொடுத்து வேகமாக அடித்தார்.

குறிப்பாக பிட்ச்சான பின் பவுன்ஸாகி சரியான கோணத்தில் வந்த அந்த பந்தை மிகச்சிறப்பான டைமிங் மற்றும் பவர் கொடுத்து அடித்த ராகுல் இந்தூர் மைதானத்திற்கு கூரைகளை தாண்டி வெளியே சென்று விழும் அளவுக்கு மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஜாம்பவான் கபில் தேவ் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த ஸ்டேண்டை கடந்து அந்த பந்தை ராகுல் அடித்தது ரசிகர்கள் மற்றும் வர்ணையாளர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. மேலும் சமீப காலங்களாகவே தடுமாறிய அவர் காயத்திலிருந்து குணமடைந்த பின் ஆசிய கோப்பையில் சதமடித்து தற்போது நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த சூழ்நிலையில் இந்த சிக்ஸர் 2019 வாக்கில் உச்சகட்ட ஃபார்மில் இருந்த ராகுல் மீண்டும் அதே மாஸ் ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்பதை காட்டும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் கேஎல் ராகுல் 52 (38) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 6 சிக்சரை பறக்க விட்ட சூரியகுமார் 72* (37) ரன்களும் ஜடேஜா 13* (9) ரன்கள் எடுத்தனர். அதனால் 50 ஓவர்களில் இந்தியா 399/5 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement