என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டிற்காக வருந்துகிறேன் – வாசிம் ஜாபர் வருத்தம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் மும்பையை சேர்ந்த வாசிம் ஜாபர் ஆவார். அண்மையில் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இவர் விலகி இருந்தார். சங்க நிர்வாகிகளுடான ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் வெளியில் சொல்லப்படுகிறது.
அத்தகைய குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்தது.

jaffer 1

- Advertisement -

இந்நிலையில் உத்தராகண்ட் அணியில் கிரிக்கெட் வீரர்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக வாசிம் ஜாபர் மீது கடும் குற்றச்சாட்டுகளை சங்கத்தின் செயலாளரான மஹிம் வர்மா எடுத்து வைத்தார். மஹம் வர்மாவின் அத்தகைய குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்ததாக வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

என்மீதுள்ள கருத்து வேறுபாட்டை மனதில் வைத்தே என்மீது இப்பொழுது குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் “சிபாரிசு செய்வதாக சொல்லி விளையாட தகுதியும், திறனும் இல்லாத சில வீரர்களை அணிக்குள் சேர்க்கும்படி என்னிடம் சிலர் நிர்பந்தித்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு இது மாதிரியான குற்றச்சாட்டுகளை என்மீது இப்போது வைக்கின்றனர்.

Jaffer

பயிற்ச்சிக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் வெள்ளி வழக்கம் போல அன்று நான் நமாஸ் செய்தேன். அவர்கள் கூறியது போல் நான் மதவாதி என்றால் பயிற்சியை முழுதாய் தவிர்த்துவிட்டு நான் நமாஸ் செய்திருப்பேன். ஆனால் நான் அதை செய்யவில்லை. இதில் என்ன தவறு என்மீது இருக்கிறது” என்று வாசிம் ஜாபர் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளார்.

Tiwary

வாசிம் ஜாபர் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், மற்றும் இந்நாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து ஜாபருக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement