இவரை பெஞ்சில் அமர வைப்பதில் எந்த நியாயமும் இல்லை, சிஎஸ்கே வீரருக்காக வரிந்து கட்டிய – வாசிம் ஜாபர்

- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரை கைப்பற்ற வேண்டுமானால் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கொல்கத்தாவில் நேற்று நடந்த 2வது போட்டியில் விளையாடியது.

Pooran

- Advertisement -

அதில் இந்தியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரான் 62 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினார். அவரைப் போல கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த ரோவ்மன் போவெல் 68* ரன்கள் விளாசி தனது அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற போதிலும் இதர வீரர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

சொதப்பும் இஷான் கிசான்:
இதை தொடர்ந்து இந்த 2 அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிப்ரவரி 20ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராடுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இந்த டி20 தொடரில் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் 42 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் நடந்த 2வது போட்டியிலும் 10 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இத்தனைக்கும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் சாதனை படைத்தார். அவரின் இந்த மோசமான பார்ம் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை செலவு செய்து வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தினரை கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கைக்வாட்:
இப்படி இஷான் கிசான் சொதப்பி வரும் இதே நேரத்தில் இதே இந்திய அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து மலைபோல ரன்களைக் குவித்த மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சமீப காலங்களாக இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்.

Ruturaj
Ruturaj Gaikwad

இந்நிலையில் ருதுராஜ் கைக்வாட்க்கு விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். இருப்பினும் அதன் பின் நடைபெறவுள்ள இலங்கை தொடரில் ருதுராஜ்க்கு வாய்ப்பளிப்பது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதே சமயம் அவருக்கு வழங்கப்படும் வாய்ப்பு என்பது வெறும் ஒரு போட்டியுடன் நின்றுவிடாமல் நீண்ட வாய்ப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் முழு தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரும் சிறப்பாக விளையாடுவார்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பெஞ்சில் எவ்வளவு நாட்கள்:
கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்ற ருத்ராஜ் கைக்வாட் அதன்பின் இலங்கையில் நடந்த டி20 தொடரில் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அவருக்கு அந்த தொடரில் முழுமையாக வாய்ப்பளிக்காமல் வெறும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது.

ruturaj 1

அதன் பின் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடர் மற்றும் ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரின் பெயர் இடம் பெற்றிருந்த போதிலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நல்ல வாய்ப்புக்காக தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவருக்கு விரைவில் வாய்ப்பளிக்க வேண்டும் என வாசம் ஜாபர் கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் அந்த வாய்ப்பு ஒரு சில போட்டிகள் என்று இல்லாமல் நீண்ட வாய்ப்பாக இருக்க வேண்டும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் சமீபத்தில் 15 கோடிகளுக்கு வாங்கப்பட்ட இஷான் கிசான் ரன்கள் குவிக்க தடுமாறுவது பற்றி வாசிம் ஜாபர் மேலும் பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான் விஷயத்தில் நாம் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் இந்தியாவுக்காக அறிமுகமாக களமிறங்கிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அரை சதம் அடித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரின் பங்கு சிறப்பானதாகும்.

இதையும் படிங்க : INDvsWI : இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன் இதுதான் – அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் 15 கோடிகளுக்கு வாங்கப்பட்டது அவரின் மனநிலையில் விளையாடுகிறது என நினைக்கிறேன். திடீரென அதில் இருந்து அவரால் வெளிவர முடியாது. அத்துடன் அவர் பேட்டிங் செய்யும் போது பந்து ஸ்விங் ஆனது. அதன் காரணமாகவே ரோகித் சர்மா கூட பந்துகளுக்கு சமமான ரன்களை அடித்தார். எனவே தற்போது அவரை தொந்தரவு செய்யாமல் விட வேண்டும். ஒருமுறை அவர் பார்முக்கு திரும்பி விட்டால் அதன்பின் மிகச் சிறப்பாக விளையாடுவார்” என கூறியுள்ள அவர் இஷான் கிஷனுக்கு தனது ஆதரவையும் அளித்துள்ளார்.

Advertisement