சச்சினா ? கோலியா ? இருவரில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன். சிறப்பான பதில் அளித்த – வாசிம் ஜாபர்

- Advertisement -

கொரோனா பாதிப்பின் காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியும் நடப்பது சந்தேகம் என்று தோன்றுகிறது. இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Jaffer

- Advertisement -

மேலும் ஏப்ரல் 15ம் தேதியும் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இந்தியாவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என்ற காரணத்தினால் ஐபிஎல் ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தற்போது மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள், நட்சத்திரங்கள் ,தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தற்போது தங்களது வீட்டில் முடங்கி நேரத்தை கழித்து வருகின்றனர்.

sachin-kohli

இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்க பட்ட இந்த நாட்களை ரசிகர்களுக்காக செலவிட்டு வரும் கிரிக்கெட் பிரபலங்கள் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ரஞ்சி நாயகன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

- Advertisement -

அதன்படி ரசிகர் ஒருவர் வாசிம் ஜாபரிடம் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா ? அல்லது கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேனா ? இவர்கள் இருவரின் சிறந்த பேட்ஸ்மேன் குறித்து உங்களது தேர்வு என்ன என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வியை கண்ட அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் வியப்பாக இருந்த இந்த கேள்விக்கு தனது வித்தியாசமான முறையில் பதிலை அறிவித்துள்ளார்.

Sachin

அதில் அவர் குறிப்பிட்டதாவது : இரண்டு வீரர்களும் பிரித்துப் பார்க்கக்கூடிய வீரர்கள் கிடையாது இரண்டு பேருமே மிகச்சிறப்பான வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவரவரது காலகட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எனவே சச்சின் விளையாடிய காலத்தில் சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கோலி விளையாடி வரும் காலத்தில் தற்போது அவர் சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார்கள் என்று வித்தியாசமான பதிலை புத்திசாலித்தனமாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement