இவ்ளோ நாள் கழிச்சி கெடச்ச வாய்ப்பை இப்படியா வேஸ்ட் பண்ணுவீங்க – இளம் வீரரை கடிந்த வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கடந்த பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெற்ற இந்த தொடரின் 3 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.

IND-1

- Advertisement -

அத்துடன் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த டி20 தொடரில் ஏற்கனவே 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா தற்போது பெற்ற வெற்றியால் கடைசியாக நடந்த 3 அடுத்தடுத்த டி20 தொடர்களில் ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றியை பெற்று அசத்தியது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சு சாம்சன்:
இந்த டி20 தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட வேளையில் வாய்ப்பில்லாமல் நீண்ட நாட்கள் தவிர்த்து வந்த வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களுக்கு பின் இத்தொடரில் இந்தியாவிற்காக விளையாடினார்.

sanju samson

குறிப்பாக முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓய்வெடுத்த காரணத்தால் இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 2வது போட்டியில் மிடில் ஆர்டரில் 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் தொடக்க வீரராக விளையாடிய இஷன் கிஷன் காயம் அடைந்ததால் 3வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக விளையாடிய அவர் 12 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் இந்த தொடரில் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 57 ரன்கள் மட்டுமே எடுத்து பெரிய அளவில் ரன்கள் குவிக்காமல் சுமாரான பேட்டிங்கை மட்டுமே வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஏமாற்றமடைந்த வாசிம் ஜாபர்:
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை சஞ்சு சாம்சன் மிக சரியாக பயன்படுத்தவில்லை என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் கண்டிப்பாக நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான கடைசி 2 போட்டியில் 3வது விக்கெட் கீப்பராக அல்லது பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரால் என்ன முடியும் என்பதை ஓரளவு காட்டினார். ஆனால் அவரின் நிலைமையில் இருக்கும் இதர வீரர்கள் பயன்படுத்திய அளவுக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தவில்லை. அதனால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு பங்காற்ற அவரிடம் ஏராளமான திறமைகள் உள்ளது” என கூறினார்.

samson

அவர் கூறுவது போல பொதுவாகவே அபார திறமை கொண்ட ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கருதப்படும் சஞ்சு சாம்சனுக்கு ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இருப்பதால் இந்திய அணியில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் தற்போது போல ஏதேனும் ஒரு சில போட்டிகள் மட்டுமே கிடைக்கிறது. எனவே ஒரு சில போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பில் மிகப்பெரிய ரன்களை குவித்து இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என சஞ்சு சாம்சன் மீது எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை பெரிய அளவில் பயன்படுத்த தவறி வரும் அவர் அதன் காரணமாக தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடிக்க தடுமாறி வருகிறார்.

- Advertisement -

நீண்ட வாய்ப்பு கிடைக்குமா:

இத்தனைக்கும் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அளவுக்கு வளர்ந்துள்ளார். இவ்வளவு திறமைகள் கொண்டுள்ள சஞ்சு சாம்சன் முக்கிய வாய்ப்பை இப்படி கோட்டை விடுவது மனதிற்கு வேதனை அளிப்பதாக வாசம் ஜாபர் கூறியுள்ளார். இருப்பினும் அவ்வளவு திறமை கொண்டுள்ள இவருக்கு இந்திய அணி நிர்வாகம் இதுநாள் வரை ஒரு நீண்ட வாய்ப்பு கொடுத்தது இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இதையும் படிங்க : மைதானத்தின் வெளியில் நின்று கூச்சலிட்ட சிறுவர்கள். கோலி கொடுத்த சர்ப்ரைஸ் – சிறுவர்கள் மகிழ்ச்சி

இதுபற்றி வாசிம் ஜாபர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவருக்கு வரும் காலங்களில் வாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும் என நம்புகிறேன். இப்போது இருக்கும் இந்திய அணி நிர்வாகம் அவர் 30 வயதை நெருங்கியதை பற்றி கவலை கொள்ளாமல் வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ள அவர் நல்ல திறமையுள்ள சஞ்சு சாம்சனுக்கு ஒரு நீண்ட வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட உள்ள அவர் அதில் மிகப்பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு தாமாகவே தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement