பண்ட் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரை உடனடியாக மாற்ற வேண்டும் – வி.வி.எஸ் லட்சுமணன் பாய்ச்சல்

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்தத் தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்றதால் இந்த தொடர் சமனில் முடிந்தது.

pant 1

இந்த தொடரில் இந்திய அணியின் நான்காவது வீரராக பண்ட் களம் இறங்கினார். அவர் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. தோனிக்கு பதிலாக அணியில் இணைந்த பண்ட் தொடர்ந்து சிறப்பாக விளையாட குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : பண்ட் நான்காவது இடத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவருடைய அதிரடி ஆட்டம் 5ஆவது அல்லது 6ஆவது வீரராக களம் இறங்கினால் அவருக்கு கைகொடுக்கும் ஏனென்றால் அந்த இடங்களில் விளையாடும்போது அவர் அதிரடியாக விளையாடலாம் அத்துடன் அதற்கு சூழ்நிலையும் சாதகமாக அமையும்.

Pant

எனவே தற்போதுள்ள அணியில் ஐயர் அல்லது பாண்டியா நான்காவது இடத்தில் விளையாடலாம் அதனைத் தொடர்ந்து பண்ட் விளையாடினால் அவருடைய ஆட்டம் அவருக்கு கை கொடுக்கும் மேலும் தோனிக்கு பதிலாக பண்ட் விளையாடி வருவதால் அவர் மீது நெருக்கடி அதிகரித்துள்ளது. தோனியின் இடத்தை நிரப்பபுவது அவ்வளவு எளிதல்ல என்று லட்சுமணன் கூறினார்.

Advertisement