உங்க மரியாதையா நீங்களே கெடுத்துகிட்டீங்க. இப்படியா பண்ணுவீங்க – இந்திய வீரர்கள் மீது கோவத்தை காண்பித்த முன்னாள் வீரர்

Ind-lose
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி ஒரு புறம் இருக்கையில் இந்திய வீரர்களின் நடத்தையில் உள்ள குறையினால் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வீரர்களின் இந்த செயல்பாடுகள் குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

ஆம், ஆக்ரோஷமாக ஆடுகிறோம் என்று நினைத்து கொண்டு நியூசி வீரர்களை ஏகவசனம் பேசியுள்ளனர். ஆம், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்து வெளியே சென்றபோது விராட்கோலி அவரை சீண்டும் விதமாக வெறித்தனமாக கத்தினார்.
மேலும், நியூசிலாந்து ரசிகர்களை பார்த்து கெட்ட வார்தையிலும் பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனால் பலரும் பல விமர்சனங்களை இந்திய வீரர்கள் மீது வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஸ் லட்சுமணன் கூறியுள்ளதாவது :இந்திய அணி தோற்றது மட்டும் பிரச்சனை இல்லை, ஆனால் ஒழுங்கீனமாகவும் நடந்துகொண்டுள்ளனர்.

Laxman-1

எதிரணி வீரர்களின் மீது இருந்த மரியாதையை கெடுக்கும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளனர். இது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் மேலும் எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் லக்ஷ்மண் காட்டமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement