என்னைப்பொறுத்தவரை எல்லா பார்மேட்டிலும் இவரே உலகின் நம்பர் 1 பவுலர் – வி.வி.எஸ் லக்ஷ்மனன்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்கா சென்றடைந்துள்ள வேளையில் இந்த தென்ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND

- Advertisement -

மேலும் இந்தத் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற அருமையான வாய்ப்பு உள்ளதாகவும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த விளங்கும் பவுலர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் தற்போது கருத்து ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : பும்ரா எப்பொழுதுமே தான் விளையாடும் போட்டியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். கடைசியாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட நாம் அதனைக் கண்டோம். எப்போதெல்லாம் கேப்டன் விக்கெட் வீழ வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் பும்ரா பந்து வீச வருகிறார்.

bumrah 2

அதோடு பந்து ரொம்ப பழையதாக மாறினாலும் பும்ரா அந்த நேரத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போதுள்ள பவுலர்களில் பும்ரா தான் என்னை பொறுத்தவரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பவுலர். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரால் தனது திறமையை நிரூபிக்க முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் ரோஹித்-ராகுல் ஜோடியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-ரிஸ்வான் – விவரம் இதோ

வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு கண்டிஷனில் அவர் பந்து வீச வந்தாலும் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் அவரது செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக லட்சுமணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement