அவுட் ஆன விரக்தியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த இந்திய கிரிக்கெட் வீரர் – பரபரப்பு செய்தி

Ground
- Advertisement -

ஹைதராபாத்தில் நடந்த டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 41 வயதை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் விரேந்திர நாயக் என்பவர் அரைசதம் கடந்து 66 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவுட் ஆன விரக்தியில் பெவிலியன் திரும்பிய அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் சுவற்றில் வேகமாக மோதியதாக வீரர்களால் தெரிவித்தனர்.

Virendra Naik

- Advertisement -

அதனை அடுத்து அவர் மருத்துவ வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் அவரது இறப்பிற்கு மாரடைப்பு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர் நடந்த விசாரணையில் ஏற்கனவே நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த வீரேந்திர நாயக்கிற்கு ஐந்து வயதில் ஒரு குழந்தையும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement