விராட்கோலியை பயமுறுத்திய மிகப்பெரும் பௌலர் ..! பயத்தில் கோலி..!

- Advertisement -

இந்திய அணியில் ஒரு சிறப்பான பேட்ஸ்மேனாக கோலி இருந்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்து வரும் கோலி விரையில் சச்சின் சாதனைகளை கூட முறியடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்றும் கூறலாம். ஆனால், கோலி பார்த்து நடுங்கும் பந்துவீச்சாளரும் உள்ளாராம்.

viratkolhi

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கோலி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய பல்வேறு அனுபவங்கள் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் பாகிஸ்தான் அணியின் ‘கிங் ஆப் சுவிங்’ என்றழைக்கபடும் வாசிம் அக்ரம் தான் நான் பார்த்து நடுங்கிய பந்துவீச்சாளர்.ஒரு வேலை நான் அவரது பந்து வீச்சுகளை எதிர்கொண்டிருந்தால் கண்டிப்பாக பயந்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் ‘கோலி தான் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேன். பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் எப்படி ரன் குவிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளும் நேரம் என்பது வரும். அந்த வகையில் கோலி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அற்புதமாக விளையாடி வருகிறார்.’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

wasimakram

மேலும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய அனுபவத்தை பற்றி கோலி தெரிவிக்கையில்’நான் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போது இந்திய அணி வீர்களிடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் பேசுவார்களா என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், இரு நாட்டு வீரர்களும் உடை மாற்றும் அறையில் கேலி கிண்டல்கள் செய்து சிரித்துக் கொண்டிருப்பார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement