இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – விராட் கோலி புகழாரம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் கடந்த 14ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான இன்று இந்திய அணி போட்டியை வெற்றிகரமாக முடித்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷில் 150 ரன்களை குவிக்க இந்திய அணி 493 ரன்கள் குவித்தது.

ind 1

- Advertisement -

இதனால் 343 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி பங்களாதேஷ் அணியை இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய அகர்வால் (243 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இந்திய அணி சார்பாக ஷமி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : எனக்கு உண்மையாகவே என்ன கூற வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் முற்றிலும் சிறப்பான ஆட்டத்தை நமது அணி வழங்கியுள்ளது. இந்தப் போட்டியில் நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

shami

இந்த மைதானத்தில் பந்து வீசுவது சற்று சிரமமான விடயம் தான் இருப்பினும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி உள்ளனர். ஒரு கேப்டனாக இந்த பந்துவீச்சு பலத்தை வைத்திருப்பது உண்மையிலேயே ஒரு கனவு மாதிரி இருக்கிறது. உண்மையாகவே தற்போது இந்திய அணி மென்மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது என்று விராட் கோலியை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement