இந்த ஒருநாள் தொடரின் வெற்றி முழுக்க முழுக்க இவர்களால் மட்டுமே கிடைத்தது – விராட் கோலி புகழாரம்

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று புனே மைதானத்தில் முடிவடைந்தது. நேற்றைய பரபரப்பான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தத் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

trophy

- Advertisement -

இந்திய அணி சார்பாக தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், பண்ட் 78 ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தாலும் மலான் மற்றும் சாம் கரண் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் வந்தது. வெற்றிக்கு முக்கியமான அந்த கடைசி வரை தமிழக வீரரான நடராஜன் வீசினார்.

அந்த ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாக போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மீதமுள்ள 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் மட்டுமே சென்றதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி தன் வசப்படுத்தியது.

nattu

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறுகையில் : தரம் வாய்ந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி சிறப்பான ஒன்று. சாம் கரன் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை இறுதிவரை தக்க வைத்தார். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர்.

- Advertisement -

வெற்றி இலக்கை நெருங்கும்போது ஹார்திக் பாண்டியா, நடராஜன் ஆகியோர் கேட்ச் விட்டது அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் அதனால் அவர்கள் இருவரும் அழுத்தத்தில் இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பந்துவீசும் போது சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இந்த போட்டியில் ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காததும், புவிக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது சற்று ஆச்சரியமாக இருந்தது.

bhuvi

இந்த ஒருநாள் தொடர் முழுக்க முழுக்க பவுலர்களால் கிடைத்த வெற்றி என்றே நான் கூறுவேன். தொடரில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா மற்றும் க்ருனால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இந்திய அணியின் டெத் பேட்டிங் சிறப்பாக உள்ளது. முதல் மூன்று வீரர்களில் ஒருவர் சதம் அடித்தாலும் இனி எங்களால் 370, 380 ரன்களை குவிக்க முடியும். இந்த வெற்றி அருமையான ஒரு வெற்றி என கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement