- Advertisement -
உலக கிரிக்கெட்

Virat Kohli : இதனை 1990 களில் இருந்து செய்து வருகிறேன் – விராட் கோலி

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்திய அணியின் இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மற்றுமின்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த வெற்றியினை ஒரு போட்டோவினை பதிவிட்டு தனது மகிழ்ச்சியினை கோலி வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம் :

சிறுவயதில் அவர் நின்று பார்க்கும் போஸ் கொண்ட புகைப்படத்தினை பதிவிட்ட கோலி இந்த போஸை 90 களின் துவக்கத்தில் இருந்து செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by