தன் மீதான விமர்சனங்களுக்கு ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்த விராட் கோலி – விவரம் இதோ

Kohli-Twitter
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலி அடுத்ததாக சிறிது ஓய்வினை எடுத்துக் கொள்ள உள்ளதால் இன்றைய போட்டியில் அவரது ஆட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்பது அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான விராட் கோலி சமீப காலமாகவே சரிவர விளையாடவில்லை என்பதனால் அவரின் மீதான விமர்சனங்கள் அதிக அளவில் உள்ளன.

கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதனை தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் அவர் மீது ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற வரும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் சரிவர விளையாடாதது அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஆனாலும் ஒரு புறம் விராட் கோலிக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பாட்லர், முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போன்றோர் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன் மீதான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க விராட் கோலி தற்போது அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டு இருந்த அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அதில் பறவையின் இரண்டு சிறகுகள் உள்ளது. அதன் அருகில் கீழ் அமர்ந்தபடி கோலி உட்கார்ந்து இருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டதாவது : ஒரு வேலை நான் கீழே விழுந்தால் என்ற கேள்வி இருக்கிறது.

- Advertisement -

அதற்கு கீழே ஒருவேளை நாம் மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா என்ற வாசகம் எழுதியுள்ளது. இந்த வரிகளின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு விராட் கோலி பதில் அளிக்கும் வகையில் இதனை பதிவிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதையும் படிங்க : மும்பை கழற்றிவிட்டதும் பாண்டியா மனமுடைந்தார், இறுதியில் நல்லதா போச்சு – பின்னணியை பகிரும் ஜாம்பவான்

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான வீரராக வலம் வந்த கோலி 70 சதங்கள் அடித்தபோது இன்னும் பல சதங்களை அடித்து பல்வேறு சாதனைகளை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விராட் கோலி மோசமான சரிவை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement