Virat Kohli : உலகக்கோப்பை தொடர் முடிந்து மே.இ அணிக்கு எதிரான தொடரில் கோலி, பும்ரா விளையாடமாட்டார்கள் – பி.சி.சி.ஐ

தற்போது இங்கிலாந்து நாட்டில் உலக கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு

Bumrah
- Advertisement -

தற்போது இங்கிலாந்து நாட்டில் உலக கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது என்று கருதப்படுகிறது.

india

- Advertisement -

இதனால் இந்த உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி விளையாட உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உலகக்கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் போன்றவற்றில் விளையாட உள்ளது. இந்த போட்டி அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

bumrah 2

இந்த தொடரில் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடிவரும் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் ஆகஸ்ட் மாதம் அதே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணியில் இணைவார்கள் என்று பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement