ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இவங்க 2 பேர் தான் ஓபன்னர்ஸ் – விராட் கோலி அதிரடி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை 23ஆம் தேதி மைதானத்தில் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியதால் இந்த ஒருநாள் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

indvseng

- Advertisement -

ஏனெனில் டி20 தொடரில் பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி இரண்டு இளம் வீரர்களுக்கு அணியில் அறிமுக வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி தற்போது ஒரு நாள் போட்டிக்கான அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய அணிக்கு தற்போது பிரச்சனையாக இருந்து வரும் துவக்க வீரர்களுக்கான இடத்தில் யார் இறங்குவார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் டி20 தொடரின் போது ஐந்து போட்டிகளில் நான்கு முறை இந்திய அணியின் துவக்க ஜோடிகள் மாற்றப்பட்டனர். இதன் காரணமாக ஒருநாள் தொடரிலும் இதுபோன்ற துவக்க ஜோடி மாற்றம் இருக்குமா என்று ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

rohith 1

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் யார் துவக்க வீரராக விளையாடுவார்கள் என்பது குறித்து கேப்டன் கோலி தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அது குறித்து அவர் தெரிவிக்கையில் : இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தான் துவக்க வீரர்களாக இந்த தொடரில் விளையாடுவார்கள்.

Dhawan

அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம் ஏனெனில் மற்ற பார்மெட் கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் இருவரும் கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும் அவர்களது ஓபனிங் தான் இந்த தொடரிலும் இருக்கும் என விராத் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement