உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில் கோலி அனுஷ்கா ஜோடிக்கு இது தேவையா என எரிச்சலடைந்த ரசிகர்கள்

Anushka
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் மீதும், கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் மெல்ல மெல்ல எழதுவங்கியுள்ளன.

தோல்விக்காக இந்திய அணியின் கேப்டன் கோலி மீதும் இந்திய அணி மீதும் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் லண்டன் வீதிகளில் சுற்றி வந்த புகைப்படங்களும் ஹோட்டல் ஒன்றில் தங்களது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது இவர்கள் இருவரும் லண்டன் நகரை சுற்றிவருவது ரசிகர்கள் இடையே சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதோ அவர்களது புகைப்படங்கள் :

விமான டிக்கெட் தாமதம் காரணமாக இந்திய அணி இன்னும் நாடு திரும்பாதது குறிப்பிடத்தக்கது. 15 அல்லது 16 ஆம் தேதி இந்திய அணி நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement