இவர்கள் இருவர் தான் இந்திய அணியின் மேட்ச் வின்னர்கள். டி20 உ.கோப்பை நமக்குத்தான் – பேட்டிங் கோச் பேட்டி

Rathour
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

IndvsNz

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இன்று பேட்டியளித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில் : தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த வருடம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு முன்னர் வரை இந்திய அணியில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் உலகக்கோப்பை அணியை நாங்கள் ஏற்கனவே தயார் செய்து விட்டோம். அதில் பெரிய அளவு மாற்றங்கள் இருக்காது என்று விக்ரம் ரத்தோர் கூறினார். மேலும் டி20 அணியில் எங்களைப் பொறுத்தவரை ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நான் பார்க்கிறோம். அவர்களின் பேட்டிங் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு மைதானங்களிலும் மற்றும் வெவ்வேறு நாடுகளிலும் அவர்கள் தங்களை அட்ஜஸ்ட் செய்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கின்றனர்.

rahul 4

இது போன்ற வீரர்களை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. மேலும் அவர்கள் நிச்சயம் உலக கோப்பை தொடரில் மேட்ச் வின்னராக இந்திய அணிக்கு செயல்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் உரிய வாய்ப்புகள் கொடுத்து மேலும் உற்சாகப்படுத்த உள்ளோம். எந்த ஒரு மைதானத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் இருவரிடமும் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது என்று விக்ரம் ரத்தோர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement