INDIA : தவான், புவனேஷ்வர் குமாரை தொடர்ந்து மற்றுமொரு இந்திய வீரர் காயம் – விவரம் உள்ளே

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று

Shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 7 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த போட்டி 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் நிலை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தவான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு இந்திய வீரர் காயம் அடைந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த விஜய் சங்கர் பும்ரா பந்துவீச்சில யார்க்கர் பந்தினை கணிக்க தவறி காலில் அடி வாங்கி வலியால் அவதிப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Shankar

ஏற்கனவே காயம் காரணமாக வெளியேறிய தவானுக்கு பதில் விஜய் சங்கர் கடந்த போட்டியில் தான் இந்த அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காயம் நாளை மறுதினதிற்குள் சரியாகி விடும் என்பதால் அவர் நாளை முதல் தீவிர பயிற்சி மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்போர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement