Vijay Shankar : குறுகிய காலத்தில் உலககோப்பைக்கு விஜய் ஷங்கர் தேர்வாக காரணம் – இதுதான்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Kohli
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் ஷங்கர் இடப்பிடித்துள்ளார். ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜய் ஷங்கர் தேர்வானது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு ராயுடுவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ராயுடு எதிர்பார்த்த அளவு தனது திறமையை நிரூபிக்க தவறினார். ஆனால், விஜய் ஷங்கர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே தன் திறமையை நிரூபித்து உள்ளார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Shankar

மேலும், தோனி மற்றும் கோலி ஆகியோர் விஜய் ஷங்கரின் திறமை மீது அபரிவிதமாக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே விஜய் ஷங்கர் அணியில் இடம்பிடித்ததற்கு இவர்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தனர். மேலும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் விஜய் ஷங்கர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் தெரியும் விஜய் ஷங்கர் சாதிப்பாரா ? இல்லை சோதிப்பாரா ? என்று பார்ப்போம்.

Advertisement