இந்திய அணியில் எனக்கு பிடித்த வீரர், கேப்டன் மற்றும் ஓப்பனர் இவர்கள்தான் – விஹாரி பேட்டி

Vihari-1
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி தனக்கு பிடித்த சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர் பற்றி பேசியுள்ளார். கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் விளையாட்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அதனைமூலம் ரசிகர்களின் பல விதமான கேள்விகளுக்கும் தயக்கமின்றி தங்களது பதில்களை அளித்து வருகின்றனர். மேலும் வீரர்கள் அவர்களுக்கு இடையேயும் பல விடயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ரோகித்சர்மா போன்ற பல வீரர்களும் ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்களை இதன் மூலம் கூறி வருகின்றனர். இந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ள ஹனுமா விஹாரி தனக்கு பிடித்த வீரர்கள் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

கிரிக்கெட் வரலாற்றில் எனக்கு பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, விராட் கோலி ஆகியோர் ஆவர். இதில் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த கேப்டன்கள்.என்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சிறந்த துவக்க வீரராக இருக்கிறார். அவர்தான் எனக்கு பிடித்த துவக்க வீரர் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

தன்னுடன் ஆடும் அனைத்து வீரர்களுக்கும் உதாரணமாக இருக்க கூடியவர் விராட்கோலி. இளம் வீரர்களுக்கும் ஒரு உற்சாகமாக இருப்பார். அவரை பலர் ரோல்மாடலாக பின்பற்றக்கூடிய ஒருவராகவும் பார்க்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்துள்ளார் ஹனுமா விஹாரி

vihari

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விஹாரி அதற்கடுத்து இங்கிலாந்தில் நடைபெற இருந்த கவுன்டி போட்டியில் விளையாட இருந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது ஓய்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement