டி20 மட்டுமல்ல 2023 50 ஓவர் உலகக்கோப்பையிலும் தோனி விளையாடுவார். ரகசியத்தை உடைத்த – வேணுகோபால் ராவ்

Venugopal
- Advertisement -

கிரேக் சாப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அப்படி வாய்ப்பு பெற்ற ஒருவர் தான் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் வேணுகோபால். ராவ் ஆந்திர மாநிலத்தின் சிறிய ஊரிலிருந்து வந்து இந்திய அணிக்காக விளையாடினார். ஐபிஎல் அணியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியவர் முதல் தரப் போட்டிகளில் 7000 ரன்களுக்கு மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

Rao

- Advertisement -

இவர் தற்போது சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நாளிதழுக்கு பேட்டியளிக்கையில் தோனி போல் சிறிய ஊர்களில் இருந்து வருபவர்கள் எப்படி தோனியிடம் இருந்து உத்வேகத்தை பெற்றனர் என்பது குறித்து அவருடன் ஓய்வு அறையை பகிர்ந்து கொண்ட சக வீரராக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி போன்று சிறிய ஊர்களில் இருந்தே நான், புவனேஸ்வர் குமார், பிரவீன் குமார், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளோம்.

சிறு ஊர்களில் இருந்து வந்து இந்தியாவுக்காக ஆடுவது மிகப்பெரிய கௌரவமாகவும், இந்திய ஏ அணிக்காக தோனி மற்றும் நான் இன்னும் சில வீரர்கள் விளையாட செல்லும் பொழுது அவர் எப்பொழுதும் மன ரீதியாக கவனமாக இருங்கள் என்று எங்களிடம் கூறிக் கொண்டே இருப்பார். இந்திய அணிக்காக என்றாவது ஒருநாள் ஆடுவோம் என்ற மன உறுதி நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும் என்றும் கூறிக் கொண்டே இருப்பார்.

venugopal 1

எனவே அவர் எப்போதும் மனரீதியாக தயாராக இருப்பவர் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்தோம். தோனியின் மூலம் பல வீரர்கள் இந்திய அணிக்குள் வந்துள்ளனர். தற்போது கூட நவ்தீப் சைனி மற்றும் சாஹல் போன்ற வீரர்கள் சிறிய ஊர்களில் இருந்து இந்தியா வந்து இந்தியாவிற்கு ஆடுபவர்கள் தான்.

Venugopal-2

எனவே தோனியின் மன உறுதியை பற்றி எனக்குத் தெரியும். அதனால் அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பையிலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஒரு உலகக் கோப்பையிலும் கண்டிப்பாக ஆடுவார். ஐசிசி தொடர்களில் அவர் முக்கியமான வீரர் அவரால் மீண்டு வரமுடியாது என்ற பேச்சுக்கே இடம் இல்லை ஏனெனில் அதுதான் தோனி ஏனெனில் அவர் தோனி என்று வேணுகோபால் ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement