அம்பத்தி ராயுடுவை தொடர்ந்து அதிரடியாக ஓய்வு முடிவை அறிவித்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் – விவரம் இதோ

Rayudu
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகாத விரக்தியில் மேலும் தேர்வு குழுவினரின் குளறுபடியால் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு வீரரான வேணுகோபால் ராவ் வயது 37 தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

venu

- Advertisement -

இந்திய அணிக்காக இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 61 ரன்களை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபுதாபியில் நடந்த போட்டியில் 2006 ஆம் ஆண்டு குவித்தார், 2005 ஸ்ரீலங்காவிற்கு எதிராக தனது முதல் போட்டியில் அறிமுகமாகிய வேணுகோபால் ராவ் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 218 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் பெரிதளவு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் முதல் தர போட்டிகளில் வேணுகோபால் ராவ் சிறப்பாகவே ஆடியுள்ளார் 121 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். 17 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் என 7081 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளில் 2008 முதல் 2014 வரை விளையாடி அவர் 985 ரன்களை குவித்துள்ளார்.

venu 1

தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் மற்றும் இந்திய அணியிலும் இடம் பெறாமல் இருந்த வேணுகோபால் ராவ் தற்போது வயது முதிர்வின் காரணமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement