இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தமிழக வீரரான வி.பி சந்திரசேகர்(வயது 57) நேற்று இரவு தனது மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிட தக்கது.
மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளர், பயிற்சியாளர் மற்றும் டி.என்.பி.எல் அணி உரிமையாளர் போன்ற பல கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்து வந்தார். 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று தனது வீட்டு மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்க்கும்போது அவர் மரணம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தபோது இயற்கைக்கு மாறாக மரணம் என்று தெரியவந்தது.
அதன்படி தற்போது முதல்கட்ட விசாரணையில் சந்திரசேகர் மரணம் குறித்து போலீஸ் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் வி.பி சந்திரசேகர் டி.என்.பி.எல் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். காஞ்சி வீரன்ஸ் அணியை வாங்கிய விதத்தில் மேலும் அந்த அணியால் ஏற்பட்ட நிதி நெருக்கடியாலும் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாக போலீஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.