கழட்டிவிடப்பட இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின்.. முதல்முறையாக வாய்ப்பை பெறயிருக்கும் வருண் – வெளியான அப்டேட்

Varun and Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் இந்திய வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு வகைகளுக்கு கீழ் வீரர்கள் அவர்களது திறமைக்கு ஏற்ப தரம் பிரிக்கப்பட்டு அந்த பிரிவின் அடிப்படையில் சம்பளத்தை பெறுவார்கள். வீரர்களின் செயல்பாடுகளை வைத்தே ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒப்பந்த ஊதிய பட்டியல் நிர்ணயிக்கப்படும்.

அஷ்வின் வெளியே.. வருண் சக்ரவர்த்தி உள்ளே :

இந்நிலையில் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியல் ஏற்கனவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அந்தப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஒரு சில தினங்களில் நிச்சயம் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அப்படி வெளியாக இருக்கும் இந்த ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட இருக்கிறார்.

அதே வேளையில் மற்றொரு தமிழக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி டி20 போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிரந்தர இடத்தை பிடித்துள்ள வேளையில் ஒருநாள் போட்டிக்கான அணியிலும் தற்போது இடம் பிடித்து வருகிறார். எனவே அவருக்கு முதல் முறையாக ஒப்பந்தப்பட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியின் இளம் வீரர்களான ஹர்ஷித் ராணா, நிதீஷ் ரெட்டி, அபிஷேக் ஷர்மா போன்ற பல்வேறு வீரர்களுக்கு அறிமுக ஒப்பந்த வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஷ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கயிருந்தது.

இதையும் படிங்க : ஏன் முடியாது? டேல் ஸ்டெயின் சொன்னதை எங்களால் செய்ய முடியும்.. மும்பை அணியை எச்சரித்த – இஷான் கிஷன்

இவ்வேளையில் தற்போது அவர் மீண்டும் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்துள்ளதால் அவரும் ஏ கிரேடில் மீண்டும் ஒப்பந்த வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement