வருண் சக்ரவர்த்தி மட்டுமல்ல நடராஜனும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் – விவரம் இதோ

Varun
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மார்ச் 12-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகளுமே அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

INDvsENG

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் பெற்றுள்ள தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவது தற்போது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர் நாளை துவங்கவுள்ள நிலையில் இருவரும் தற்போது வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கின்றனர் என்பதனால் அவர்கள் இருவரும் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணி அணியில் வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வாகியுள்ள அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக தேறிவிட்டார் என்றாலும் உடற்தகுதி சோதனையை அவரால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.

varun 1

இதன் காரணமாக அவர் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மற்றொரு வீரரான நடராஜனும் தோள்பட்டை மற்றும் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் சில போட்டிகளில் விளையாடாமல் போவதற்கான வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

Nattu

அதேவேளையில் நடராஜன் டி20 தொடரை தவறவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது நடராஜன். நடராஜனாவது ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகம் ஆகி விட்டார். ஆனால் வருண் சக்கரவர்த்தி தனது அறிமுக வாய்ப்பை அடுத்தடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் தவறவிட்டு வருவது சற்று வருத்தத்தை தரும் செய்தியாகவே உள்ளது.

Advertisement