சர்வதேச போட்டியில் கூட இப்படி ஒரு கேட்சை பார்த்து இருக்க மாட்டீங்க. உள்ளூர் போட்டியில் நடந்த அதிசயம்

Catch
- Advertisement -

பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் நல்ல ஃபிட்னஸ் மற்றும் முறையான பயிற்சியை தினசரி எடுத்து வருவதாலும் அவர்கள் வியக்கத்தக்க வைக்கும் அளவிற்கு கேட்சிகளை பிடிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதையே உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பிடித்தால் அது ஒரு அசாத்தியமான விடயம் தான்.

அவ்வாறு மும்பையில் நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியில் இரு இளைஞர்கள் பிடித்த ஒரு கேட்ச் தற்போது இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன் பந்தை பவுண்டரிக்கு தூக்கி அடிக்க அதனை பவுண்டரி லைனில் இருந்த பீல்டர் லாவகமாக எதிரி தட்டிவிட அந்த பந்து மற்றொரு பில்டரை நோக்கி செல்கிறது.

- Advertisement -

அதை கவனித்த அந்த மற்றொரு இளைஞர் அதனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று காற்றில் பறந்து டைவ் அடித்து லாவகமாக கேட்ச் பிடித்தார். இதனை கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் பதிவிட்டு இருந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement