நான் பேட்டிங்கில் மரணகாட்டு காட்ட இதுவே காரணம் – உமேஷ் யாதவ் பேட்டி

Umesh-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10 பந்தில் 5 சிக்சர்களுடன் 31 ரன்கள் குவித்து அதிரடியில் அசத்தினார்.

Umesh

- Advertisement -

உமேஷ் யாதவின் ஒவ்வொரு சிக்ஸரையும் இந்திய அணி வீரர்கள் ரசித்தனர். இந்த போட்டியில் அவர் அவ்வாறு ஆக்ரோஷமாக விளையாட தற்போது காரணத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி உமேஷ் யாதவ் கூறுகையில் : களம் இறங்கும் முன் ஒவ்வொரு பந்தையும் விட்டு விலாச கோலி எனக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்தார்.

அதனால் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடுவது போல நினைத்துக்கொண்டு அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டேன். மேலும் தீபாவளி வர இருப்பதால் அதற்கு முன்னதாக தீபாவளி தாமாக்காவாக இது இருக்கும் என்று கருதினேன். அதனால் என்னால் ஒரு பெரிய சிக்சர்களை அடிக்க முடிந்தது என்று உமேஷ் யாதவ் கூறினார்.

மேலும் உமேஷ் யாதவ் அடித்த ஒவ்வொரு சிக்ஸர்க்கும் பெவிலியனில் இருந்து இந்திய வீரர்கள் மட்டுமின்றி கேப்டன் கோலியும் அதை ரசித்து துள்ளி குதித்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement