இங்கிலாந்து அணியை நிச்சயம் வெல்வோம்.! விராட் கோலி வெளியிட்ட 2 வியூகங்கள்..!

- Advertisement -

வரும் ஜுலே மாதம் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் , 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்லவிருக்கிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் ஏற்கனவே தேர்வாகி விட்டனர். இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான 2 சாத்திய கூறுகளை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Virat-Kohli

- Advertisement -

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த தொடரின் 3 வது போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை அடித்து சாதனையும் படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் வெற்றிகளை தொடர்ந்து இங்கிலாந்து அணி வலுவான தெம்பில் உள்ளது. அதனால் அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியை எப்படி எதிர்கொள்ள போகிறது என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வருகின்றனர். ஆனால், இங்கிலாந்து அணியை வெற்றி பெற 2 கூறுகளை வைத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் தெரிவித்துள்ளார்.

viratspeech

இதுபற்றி அவர் தெரிவிக்கையில் ‘ இரண்டு அணிகளிலும் புதிய பந்தை பயன்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும், நாங்கள் வேகப்பந்து வீச்சாளரை மட்டும் நம்ப போவது இல்லை, அணியின் சூழல் பந்து வீச்சாளர்களான சஹல் மற்றும் குல்தீப் யாதவ் விக்கெட் எடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தான் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் ஒரு சாத்திய கூறாக இருப்பார்கள் ‘ என்று தெறிவித்துளளார்

Advertisement