இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கை பற்றியது. இதையடுத்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கால் பந்து வீரர் நெய்மர் செய்ததை போல செய்த இந்திய வீரர் சஹாலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று (ஜூலை 12) ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவருக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களை எடுத்து.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இடையே இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வீசிய த்ரோ சஹாலின் காலை பதம் பார்த்தது. இதனால் வலியால் சஹால் காலை பிடித்துக் கொண்டே சிரித்தபடியே புல்லின் மீது உருண்டார்.
Neymar of Cricket @yuzi_chahal … ???????? pic.twitter.com/a5YrhYKlW3
— Taimoor Zaman (@taimoorze) July 12, 2018
சஹால் செய்த இந்த செயல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் செய்ததை போலவே இருந்தது என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். சஹால் செய்த இந்த செயலை கிண்டல் செய்து வரும் ட்விட்டர் வாசிகள் இதற்கு நெய்மர் ரோல் என்று hash tag வைத்து கலாய்த்து வருகின்றனர்.