கோலி மற்றும் சச்சின் ஆகியோருக்கு இடையே தற்செயலாக நடைபெற்றுள்ள – 4 ஒரேமாதியான நிகழ்வுகள்

Sachin-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் பேட்டிங் தூணாக பார்க்கப்பட்டு வருபவர் விராட் கோலி என்றால் அது மிகயல்ல. ஏனெனில் சச்சின் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு ரன்களை குவிக்கும் ரன் மெஷினாக மாறிய விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை தனது தோளில் சுமந்து வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் படைத்த பல சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து இன்றளவும் சாதனையை நாயகனாக வலம் வரும் விராட் கோலி சச்சினின் 100 சதங்கள் சாதனையையும் எட்டுவார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே எதிர்பாராமல் நடந்த நான்கு ஒற்றுமையான விடயங்களை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

1) அறிமுக போட்டி ஒரே தேதியில் அமைந்தது : சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார். மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அறிமுகமான தேதி ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2) முதல் டெஸ்ட் சதம் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான வந்தது : சச்சின் டெண்டுல்கர் கடந்த 1992-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதேபோன்று விராட் கோலியும் கடந்த 2012-ஆம் ஆண்டு அடிலெய்டு நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார். இருவருமே ஆஸ்திரேலியா மண்ணில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3) ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஆரஞ்சு தொப்பையை கைப்பற்றியது : சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அதிக ரன்களை குவித்து ஆரஞ்சி தொப்பையை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியின் கேப்டனாக அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருக்கிறார்.

4) கேப்டனாக ஒரே அணிக்கு எதிராக அறிமுகமானது : சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக கேப்டனாக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலியும் இலங்கை அணிக்கு எதிராகவே ஒருநாள் கேப்டனாக அறிமுகமாகி இருந்தார். அதேபோன்று சச்சின் 1996-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமாகினார். 2014-ஆம் ஆண்டு விராட் கோலியும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கேப்டனாக அறிமுகமாகியுள்ளார். இப்படி விராட் கோலி மற்றும் சச்சின் ஆகியோருக்கு இடையே எதிர்பாராமல் பல ஒற்றுமையான விடயங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement