தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட 3 திறமையான வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க புறப்பட தயாராகி உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டது.

IND-1

- Advertisement -

அதில் நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளையில் காயம் காரணமாக கில், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

அதேபோன்று திறமையுள்ள 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தாலும் இதுவரை ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களான சூர்யகுமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், கே.எஸ் பரத் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Bharat

ஏற்கனவே பல தொடர்களாக இவர்கள் மூவரும் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தாலும் இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் இந்த 3 வீரர்களுக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் இடம் கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை

Advertisement