கோலி ரெஸ்ட் எடுத்ததால பங்களாதேஷ் டி20 தொடரில் இவர்தான் 3 ஆவது வீரராக களமிறங்க போறாராம் – யாருக்கு வாய்ப்பு தெரியுமா ?

Kohli
- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இன்று தொடருக்கான இந்திய t20 அணி மற்றும் டெஸ்ட் அணியை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Kohli-1

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் கோலி தானாக முன்வந்து ஓய்வு எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் மீண்டும் இந்திய அணியில் கேப்டனாக திரும்புவார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது டி20 தொடரில் கோலிக்கு பதிலாக மூன்றாவது வீரராக இறங்கும் வீரர் குறித்த இடம் தான் தற்போது முக்கிய செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன்படி இந்த டி20 தொடரில் மனிஷ் பாண்டே, ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதால் இவர்களின் மூவரில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rahul

மேலும் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் ரோஹித் ராகுலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார் என்பதால் ராகுல் மூன்றாவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.

Advertisement